27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

குற்றமிழைத்த பொலிசார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்

குற்றமிழைத்த பொலிஸார் உடனடியாக கைது செய்யப்பட்டு உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை பொலீஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலையே முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்

வட்டுக்கோட்டைப் பொலீசாரின் சட்ட விரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞன் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

இக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றமிழைத்த பொலீசார் உடனடியாகக் கைது செய்யப்படுவதோடு விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

மேலும் பொலீசாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்ந்து வருகின்றதாகவும் இத்தகைய அடாவடிகள் அராஜகங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச மனக்கணித போட்டிக்கு யாழில் இருந்து 19 மாணவர்கள்

Pagetamil

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!