யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவு மாணவி ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்,
2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110மாணவர்கள் பிரச்சனைக்கு தோன்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று நாங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்
பரிட்சையில் அதிக புல்லினை பெற்ற மாணவி வனஸ்க்காக கருத்து தெரிவிக்கையில் தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்தார்