26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்து மாணவி பலி

வெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பாடசாலைக்குள் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொன்கிரீட் சுவரின் ஒரு பகுதி மாணவர்கள் 6 பேர் மீது இடிந்து விழுந்துள்ளது.

மூன்று மாணவிகள் மற்றும் மூன்று மாணவர்கள் சுவருக்கு அடியில் சிக்கியுள்ளனர்.

உள்ளூர்வாசிகள் தலையிட்டு, சுவரின் அடியிலிருந்த ஆறு மாணவர்களையும் மீட்டு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுவரின் ஒரு பகுதியை தூக்கி அகற்ற முற்பட்ட போது மாணவி ஒருவரின் தலை அந்த பகுதியில் தள்ளப்பட்டதால் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக உள்ளூர் பெண் ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!