25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை: இலங்கையை அதிர வைக்கும் மோசடிக்கும்பல்!

பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு கடுமையான சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, செல்வந்த பெற்றோரிடம் மோசடி செய்த மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலை அல்லது பாடசாலைக்கு விரைந்த பின்னர் வீடுகளில் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுவரை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், குருநாகல் நகரிலுள்ள பல பாடசாலைகளிலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் ஒருவரின் தாய்க்கு தொலைபேசியில் அழைத்த ஒருவர், வகுப்பாசிரியை என குறிப்பிட்டு, மாணவனின் அவசர சத்திர சிகிச்சைக்கு ஒரு இலட்சம் கோரியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், சந்தேகநபரை கைது செய்து நேற்று (12) நீதிமன்றத்தில் முற்படுத்தினர். அவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு மாணவனின்  தந்தைக்கு, பாடசாலையின் பிரதி அதிபர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. பிள்ளை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர அறுவை சிகிச்சைக்கு 1 இலட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை அனுப்பி வைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

மாணவனின் தந்தை ஒரு சட்டத்தரணி எனவும், அவர் பாடசாலைக்கு அழைப்பு ஏற்படுத்திய போது, அவரது பிள்ளை நலமுடன் இருப்பதாகவும், வகுப்பில் இருப்பதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

கடந்த எட்டாம் திகதி குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சகோதரிகள் இருவரில் ஒருவர் பாடசாலைக்கு செல்லாத நிலையில் மற்றைய சகோதரி பாடசாலைக்கு சென்றுள்ளார்.

இவர்களது தந்தை குருநாகலில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிவதாகவும், வீட்டில் இருந்த மகள் தனக்கு போன் செய்து, பாடசாலைக்கு சென்ற தனது மூத்த சகோதரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

செய்தி வழங்கப்பட்ட தொலைபேசிக்கு தந்தை அழைப்பு விடுத்தபோது, பதிலளித்த ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டவர், குறிப்பிட்ட மாணவி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாடசாலையுடன் தொடர்பு கொள்ளாத தந்தை, பதற்றத்துடன்  உடனடியாகவே அலுவலக வாகனத்தில் மனைவியுடன் கண்டிக்குப் புறப்பட்டிருந்தார்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து சந்தேகம் அடைந்த அவரது சக ஊழியர் ஒருவர் வைத்தியசாலை மற்றும் பாடசாலை ஆகிய இரண்டிற்கும் அழைத்து, மாணவி நலமாக இருப்பதையும், அவர் வகுப்பறையில் இருப்பதையும் உறுதிப்படுத்தினார்.

தனக்கு போன் செய்த நபர் தனது மகளின் உடனடி மருத்துவ தேவைகளுக்காக பணம் கேட்டதாக மாணவியின் தந்தை கூறியுள்ளார். இருப்பினும், அவர் பணத்தை வரவு வைக்கும் முன், அவரது நண்பர் அவரை அழைத்து, அவரது மகள் பாடசாலையில் இருப்பதாக அவருக்குத் தெரிவித்தார்.

இச்சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் குருநாகலில் உள்ள மற்றுமொரு முன்னணி ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தைக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியைப் பெற்ற பிறகு, குழந்தையின் நோய் பற்றி அறிய குழந்தையின் தாத்தாவை பள்ளிக்கு அனுப்பிய அவர், அந்த அழைப்பு போலியானது என்பதை கண்டுபிடித்தார். இதேபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன.

இந்த மோசடி கும்பல் கொடுக்கும் போன் மெசேஜ்களை கண்டு ஏமாந்த சிலர் பதற்றமடைந்து தகவல் தேடாமல் பணம் கொடுத்துள்ளனர். தமக்குக் கிடைத்த தகவலைப் பற்றி விசாரிப்பதற்காக பெற்றோர் வீடுகளில் இருந்து வெளியேறும் போது கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன.

இந்த போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், பீதி அடையாமல் பாடசாலை நிர்வாகத்திடம் இருந்து விவரங்களை சரிபார்க்குமாறும் போலீசார் கேட்டுக்கொள்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!