28 C
Jaffna
December 5, 2023
மலையகம்

மதுபோதையில் தவறிவிழுந்தவர் மாயம்!

ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் பாய்ந்தாடும் டிக்ஓயா கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

டிக் ஓயா ஒஸ்பன் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே காணாமல் போயுள்ளார்.

நேற்று (11) பிற்பகல் ஹட்டன் நகருக்கு வந்த அவர், போதையில் பஸ்ஸில் பயணித்த போது, ​​வழியில் இறங்கி அந்த வீதியில் அமைந்துள்ள தனியார் நீர்மின் நிலையத்தின் நீர் தாங்கியில் ஏறியுள்ளார்.

அப்போது அருகில் உள்ள டிக் ஓயா ஓடையில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் இவர் அதிகளவில் மது அருந்தி வந்ததாகவும் தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் காணாமல் போனவரின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!