28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

யாழில் பொலிசாரால் தேடப்பட்டவர் கடல்வழியாக இந்தியா தப்பிச்சென்று மாட்டினார்!

இலங்கையின் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர் அகதிகள் போர்வையில் தமிழகத்தில் பதுங்கி இருப்பதற்காக படகு மூலம் தனுஷ்கோடி வந்திறங்கியவர் கைது செய்த மரைன் போலீசார் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைப் பகுதியில் அந்நிய நபர்களின் நடமாட்டம் மற்றும் கடத்தல் தடுப்பு தொடர்பாக ரோந்து பணியில் ராமேஸ்வரம் மரைன் போலீசார் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் மரைன் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற இலங்கை நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் மண்டபம் மலைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவல்துறையை சேர்ந்த ஜெயராசா என தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் போலீசார் ஜெயராசாவிடம் விசாரணை நடத்திய போது இவர் மீது இலங்கை சாவகச்சேரி மற்றும் ஊர்க்காவல்துறை காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் பல குற்ற பிண்ணனி வழக்குகள் இருப்பதால் இவரை இலங்கை போலீசார் கைது செய்து சிறை தண்டனை பெற்று சிறையில் அடைத்து விடுவார்கள் என்பதால் இலங்கையிலிருந்து தப்பித்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்து படகு ஒன்றில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் இலங்கை மன்னர் மாவட்டம் பேசாலை கடற்கரையிலிருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்துள்ளதாக விசாரணையில் ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகுமூலம் கடல் வழியாக இந்திய கடல் எல்லைக்குள் வந்தது தெரிய வந்ததால் அவர் மீது மண்டபம் மரைன் காவல் நிலைய போலீசார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக வழக்கு பதிவு செய்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் அவரை சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி இலங்கையின் குற்ற பிண்ணனி உள்ள நபர் ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவி அகதிகள் போர்வையில் தமிழக அகதிகள் முகாமில் பதுங்கி இருப்பதறலகாக தனுஷ்கோடி வந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Pagetamil

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!