26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

இலங்கையில் 35 வீத ஆண்கள் ‘குடிமக்கள்’!

இலங்கையிவ் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் முப்பத்தைந்து சதவீதம் பேர் மதுவை பயன்படுத்துகின்றனர் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் – இலங்கை (ADIC Sri Lanka) தெரிவித்துள்ளது.

இலங்கையில் தனிநபர் மது பாவனை 4.3 லீற்றர் எனவும், மதுபானம் அருந்துபவர்களின் தனிநபர் மது பாவனை 18.9 லீற்றராகவும் உள்ளதாக மத்திய நிலையம் கூறுகிறது.

பயன்படுத்தப்படும் மது வகைகளில், அரக்கு மதுபான வகை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக பியர் வகையும் உள்ளது. கசிப்பு பயன்படுத்தவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு மேல் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

ஏழைக் குடும்பங்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மது, பியர் மற்றும் சட்டவிரோத மதுவுக்காகச் செலவிடுவதாக ADIC கூறியது.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால், மதுபானத்தின் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

மதுபானங்களின் விலையை குறைத்து விற்பனை நிலையங்களை அதிகரிப்பதற்கும், கள்ளச்சாராயம் அதிகரிப்பதால் வரியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறும் விஞ்ஞானப்பூர்வமற்ற வாதங்களுக்கு அரசாங்கம் ஏமாற வேண்டாம் எனவும் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!