25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சிக்கு மூத்த வீரர்கள் சாதனைகளுக்காக விளையாடியதும் ஒரு காரணம்: சாணக்கியன் எம்.பி

இலங்கை கிரிக்கெட்டின் நிலை, நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு அழிந்த பின்னர், கிரிக்கெட் அழிந்த பின்னர், அழிலுக்குக் காரணமானவர்கள் இவ்வாறு பேசுவது கேலிக்கூத்தானது என  தெரிவித்தார்.

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்-

நீண்ட காலத்திற்கு முன்பே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். கிரிக்கெட் மீதான மரியாதையை இலங்கை இழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி டி சில்வா இருந்த போது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். கிரிக்கெட் நிறுவனங்களில் அதே பெயர்கள் எப்படி மாறிவருகின்றன என்பதைப் பார்க்கிறோம்.

இந்த தோல்விகளுக்கு தற்போது ஓய்வு பெற்ற மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தங்கள் சாதனைகளுக்காக விளையாடினர். மூத்த வீரர்கள் ஒரேயடியாக வெளியேறும் போது இளம் வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.எனவே. , இதற்கான பொறுப்பை நாம் கூட்டாக ஏற்க வேண்டும்.

மாவட்ட அளவில் கூட கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகள் தான் உள்ளனர்.எல்லாவற்றையும் இழந்த பின், இந்த மாற்றங்களை செய்ய முயற்சிக்கின்றனர்.

தொலைதூர மாவட்டங்களில் லெதர் பந்தைத் தொடாத திறமையான பிள்ளைகள் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!