26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

வரணியில் கவிழ்ந்த பேருந்து

பருத்தித்துறை – கொடிகாமம் தனியார் பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – கொடிகாமம் வழித்தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு இன்று (31) செவ்வாய்க்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறை – கொடிகாமம் இடையேயான 759 வழித்தடத்தில் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வரும் குறித்த தனியார் பேருந்து சேவையில் ஈடுபடுவதற்காக கருக்காய் – வரணி பகுதியில் இருந்து பருத்தித்துறை பேருந்து நிலையத்தை நோக்கி பயணித்துள்ளது.

இதன்போது சில பயணிகளை ஏற்றிச் சென்ற போது கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் நித்திரைத் தூக்கம் காரணமாகவே குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!