மாரவில, தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (31) காலை கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த நிர்வாண சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ ~ மேற்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
தச்சு தொழிலாளியான இந்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் இருந்த இடத்தை ஒட்டியுள்ள தேவாலய மைதானத்தில் உள்ள சுவரில் பெண்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆடைகளை போலீசார் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆடைகள் உயிரிழந்த நபருடையது என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் தலையில் ரத்தம் கொட்டியதால், மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.