26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

‘யாழ் போதனா வைத்தியசாலை தனியார் வைத்தியசாலையை போலுள்ளது’: வடக்கு ஆளுனர்!

அரச வைத்திய சாலைகளில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச கண் புரை சத்திர சிகிச்சை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வைத்திய சாலையின் கண் சிகிச்சை பிரிவுக்கு வருகை தந்த போது சில விடயங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறிப்பாக அரச வைத்திய சாலைகள் தூய்மையாக காணப்படாத நிலைமையே காணப்படும். ஆனால் இன்று அதை உணரவில்லை. இது ஒரு தனியார் வைத்தியசாலை போல காட்சி அளிக்கின்றது.

இங்கே அனைத்து விடயங்களும் தனியார் வைத்தியசாலை போல இயங்குகின்ற நிலைமை தான் காணப்படுகின்றது. இதனை இங்கு பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருந்தது.

எனவே இதனை செயல்படுத்துகின்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பார் மற்றும் கண் சிகிச்சைக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் மலரவன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்றே வைத்திய சாலையின் அனைத்து சேவெகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அமேலும் அரச வைத்திய சாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!