இலங்கை கடற்படை கைது நடவடிக்கை கண்டித்தும் மத்திய, மாநில அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததால் கூறி ஐந்து விசைப்படகும் அதிலிருந்து 37 மீனவர்களின் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றனர்.
இதனைக கண்டிக்கும் வித விதமாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் அவசர கூட்டத்தில் இலங்கை கடற்படையை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு மேலும் நவம்பர் 3ஆம் தேதி ரயில் மறியலில் ஈடுபடுவதாக அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் அறிவித்துள்ளனர்.
மேலும் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.