26 C
Jaffna
November 29, 2023
இலங்கை

இலங்கைப் பெண்களுக்கு இனி இரவிலும் சுதந்திரம்

கடை மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் வரைவு சட்டமூலத்தை சமர்பிப்பதற்காக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்கள், அறிவு செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வணிகச் செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், பிற நாடுகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இரவுப் பணிகளில் ஈடுபடுவதற்காக கணக்கியல், நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பணிகளைக் கையாளும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்காக, 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவை முன்னர் தனது ஒப்புதலை வழங்கியது.

சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட கடை மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான (வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்தை ஒழுங்குபடுத்துதல்) (திருத்தம்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!