28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

தேர்தல் சீர்திருத்தம் குறித்து இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

“அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இன்றைய கூட்டத்தின் முடிவுகளை அமைச்சரவைக்கு அறிவிப்பேன். தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுள்ளது” என்று பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பல கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன,” என்று அவர் கூறினார், அதே நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  கூறினார்.

முதலில் தேர்தலை நடத்துங்கள் அதன் பிறகு தேர்தல் சீர்திருத்தங்களுக்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார். “தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருகிறோம் என்ற போர்வையில் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!