கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைத்து மேற்கொண்ட சோதனையின்போது 5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேசபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்து செல்லப்பட்ட கஞ்சாவுடன் பயன்பாடு அற்ற காணிக்குள் சந்தேக நபர் சென்றுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக, மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் சோதனையிட்டனர்.
இதன்போது, மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒட்டடைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.