28.8 C
Jaffna
December 7, 2023
குற்றம்

வழக்குச் செலவுக்கு பணமில்லாமல் தனக்குத்தானே தீ வைத்த முன்னாள் சிப்பாய்

குருநாகல் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக நேற்று (14) பிற்பகல் தனக்குத்தானே தீ வைத்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலேவெல தெவஹுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது அருகில் இருந்தவர்கள் தீயில் எரிந்த ஆடைகளை கழற்றி தீயை அணைத்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த இராணுவ வீரர் ஒழுக்கமின்மை காரணமாக இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே எனவும், மஹவ நீதிமன்றத்தில் தமக்கு எதிரான வழக்கில் ஆஜராக பணம் இல்லை என கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகளை தாயாக்கிய காமுகனுக்கு கடூழிய சிறை

Pagetamil

மதம் மாறிய கள்ளக்காதலால் விபரீதம்: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

யூடியூப் சனலை பிரபலப்படுத்த மகளின் நிர்வாண படத்தை பதிவிட முயன்ற தந்தை: வெட்டிக்கொன்ற மனைவி!

Pagetamil

கணவனின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி குத்திக் கொன்ற மனைவி கைது!

Pagetamil

விற்றமின் மாத்திரை வாங்குவதற்காக 83 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, கொள்ளையடித்த 18 வயது உடற் கட்டழகன் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!