மாலை அல்லது இரவில் மழை பெய்யலாம்

Date:

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியமுள்ள சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம், வீட்டிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது திறந்தவெளி பகுதிகளான நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகளை தவிர்க்கவும், இடியுடன் கூடிய மழையின் போது கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை காவல் நிலையப்...

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்