26 C
Jaffna
November 30, 2023
இலங்கை

இளம் குடும்பப் பெண் காய்ச்சலால் மரணம்!

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாடி ஒழுங்கை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.கேனுசா (24 ) என்ற ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்தார்.

கடந்த 6ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர், வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் 10 ஆம் திகதி காலை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிற்பகல் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (11) உயிரிழந்தார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

துயிலுமில்லத்தில் போராளிகளின் ஆடையுடன் சிறார்கள்: 2 குடும்பத்திடம் தீவிர விசாரணை!

Pagetamil

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

Pagetamil

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ஆம் கட்ட அகழ்வு இன்றுடன் இடைநிறுத்தம்!

Pagetamil

கொடிகாமம் இளைஞருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!