26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனை!

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இரவு நேரங்களில் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் புதிய மாணவர்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகளுக்கு பல்கலைக்கழக ஒழுங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்த ராகவன், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை தடுக்க தேசிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

துன்புறுத்தல் வழக்குகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணுக்கும் புகார்கள் பெறப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த எண்ணில் வரும் ஒவ்வொரு புகாரும் உடனடியாக விசாரிக்கப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!