28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

கண் நோயினால் கொழும்பு பாடசாலையொன்றின் 3 வகுப்புக்கள் மூடப்பட்டன

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் பரவும் கண் நோய் காரணமாக கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் மூன்று தரங்களில் உள்ள அனைத்து வகுப்புகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் சுமார் 100 மாணவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக குறித்த பாடசாலையின் 6, 7 மற்றும் 8 ஆம் தரங்களின் அனைத்து வகுப்புகளும் மூடப்பட்டுள்ளதாகவும் மாநகர சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மேற்கு கொழும்பு, மத்திய கொழும்பு, வடகொழும்பு, பொரளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இந்நோய் பரவி வருவதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபை, ‘கொன்ஜக்டிவிடிஸ்’ எனப்படும் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் இந்த நோய் பரவுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5 நாட்களுக்கு மேல் அறிகுறிகள் தென்பட்டால் கண் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!