27.8 C
Jaffna
September 27, 2023
இலங்கை

இலங்கையில் அதிகரித்துள்ள இளவயது மாரடைப்பு மரணங்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை பிரிவினரால் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 மரண விசாரணைகளில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர நேற்று (18) தெரிவித்தார்.

50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுடன் தொடர்புடைய 200 இறப்புகள் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பினால் ஏற்படுவதாகவும், மாரடைப்பினால் இளைஞர்கள் இறக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி, இவர்களில் பெரும்பாலானவர்கள் துரித உணவுகளுக்குப் பழகி வருவதாகவும் அவர்களில் சிலர் வேலை மற்றும் கல்விக்காக வீட்டை விட்டு வெளியே இருப்பதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘யாழில் புதிய மதுபானசாலைகள் வேண்டாம்’: ஏற்க மறுத்தது மாவட்ட அபிவிருத்திக்குழு!

Pagetamil

தாதியை கத்தரிக்கோலால் குத்திய வைத்தியரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

Pagetamil

இலங்கையின் வரி வருவாய் குறைவு: சர்வதேச நாணய நிதியம் கவலை!

Pagetamil

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் திகதி குறிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!