பாதுகாப்பு அமைச்சர மாயம்: அவரையும் தடுத்து வைத்து விசாரிக்கிறதா சீனா?

Date:

சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு (Li Shangfu) மீது அரசாங்கப் புலனாய்வு நடைபெறுவதாய் நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லி ஷாங்ஃபு கடந்த 3 வாரங்களாகப் பொதுவெளியில் நடமாவடவில்லை என்று ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதர் ராம் இமானுவேல் கடந்த வியாழக்கிழமை சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அநேகமாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் ஊகம் தெரிவித்திருந்தார்.

65 வயது லீ, பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்ற மாதம் 15ஆம் திகதி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார்.

இம்மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் வியட்நாமில் நடைபெறவிருந்த தற்காப்பு ஒத்துழைப்புக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என சீனா கூறியதால் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குள் எந்த விளக்கமும் இல்லாமல் பொது பார்வையில் இருந்து மறைந்த இரண்டாவது மூத்த அமைச்சரானார் லி.

லீ முன்னாள் சீன வெளியுறவு அமைச்சர் கின் கேங்கைப் போன்றே பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன மூத்த அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் பதவிநீக்கப்படுவது வழக்கம் என்றாலும், சமீபத்திய தசாப்தங்களில் இரண்டு கபினட் அமைச்சர்கள் இப்படி “மாயமாகுவது“ முன்னர் நடந்திராத சம்பவங்களாகும்.

பாதுகாப்பு அமைச்சருக்கு சிறிய அதிகாரம் இருந்தாலும், அவர் மக்கள் விடுதலை இராணுவத்தின் வெளி முகம். குறைந்த சர்வதேச பிரசன்னம் கொண்ட ஒரு விண்வெளிப் பொறியியலாளர் லி, கடந்த ஒக்டோபரில் சீனாவின் உயர்மட்ட இராணுவ அமைப்பான மத்திய இராணுவ ஆணையத்தில் இணைந்த பின்னர் மார்ச் மாதம் பாதுகாப்பு அமைச்சராக உறுதி செய்யப்பட்டார்.

லியின் நியமனம் ஆரம்பம் முதலே சர்வதேச அளவில் சர்ச்சைக்குரியதாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில், ரஷ்ய பாதுகாப்பு அல்லது புலனாய்வுத் துறைகளுடன் தொடர்புடைய நபர்களுடன் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்கா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்த நேரத்தில், லி பிஎல்ஏவுக்கான ஆயுதங்களைத் திட்டமிட்டு, உருவாக்கி, வாங்கிய ஏஜென்சியின் இயக்குநராக இருந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை சிக்கலாக்கும் பொருளாதாரத் தடைகள் தொடரும் போது, லியை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினைச் சந்திக்க சீனா அனுமதி மறுத்தது.

லி ஊழல் தொடர்பாக விசாரிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் ஆயுதங்கள் மேம்பாடு மற்றும் கொள்முதலுக்கு பொறுப்பான துறையின் தலைவராக அவர் இருந்த காலத்துடன் தொடர்புடையதா என்பது தெளிவாக இல்லை என்று ஒருவர் கூறினார்.

ஜூலை மாதம், ஜனாதிபதி ஜி தலைமையிலான மத்திய இராணுவ ஆணையம், கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய உபகரணங்கள் கொள்முதல் மீதான ஊழல் விசாரணையை அறிவித்தது. அடுத்த மாதம், நாட்டின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை மேற்பார்வையிடும் PLA இன் ரொக்கெட் படையின் இரண்டு உயர்மட்ட ஜெனரல்களை ஜி  நீக்கினார்.  இந்த விசாரணையில் லியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அதிகாரப்பூர்வமாக, லியின் இருப்பிடம் குறித்து சீனா எதுவும் கூறவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரானின் 2 நிபந்தனைகள்

அமெரிக்கா மற்றும் ஈரானிய தலைமை இரண்டும் போர் நிறுத்தத்திற்கான சாத்தியத்தை பகிரங்கமாக...

11 அணுகுண்டுகளை தயாரிக்கப் போவதாக நாம் சொல்லவேயில்லை… ஈரானிய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்!

அணு குண்டுகளை உருவாக்க யுரேனியத்தை செறிவூட்டியதாக ஈரானியர்கள் தம்மிடம் தெரிவித்ததாக அமெரிக்க...

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்