வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
வட மாகாண பாடசாலைக்கு இடையிலான தடகள போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று (8) இடம்பெற்ற 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் மன்னார் மாவட்டத்தின் மடுக்கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு மகாவித்தியாலய மாணவி யோ.சுடர்மதி புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
2018 ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் படைக்கப்பட்டிருந்த 51.7 செக்கன்கள் என்ற சாதனையை,நேற்று இடம்பெற்ற போட்டியில் யோ.சுடர்மதி் 50.08 செக்கன்களில் ஓடி முடித்து புதிய மாகண சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1