இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்தி விதிக்கப்பட்ட தடையை நீக்க சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று (27) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எழுத்து மூலம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு இன்று (28) தெரிவித்துள்ளார்.




