இரகசியமாக புகைபிடித்த O/L மாணவர்களால் விபரீதம்; ரூ.50 மில்லியன் பெறுமதியான நீர்க்குழாய்கள் நாசம்: 6 மாணவர்கள் கைது!

Date:

கேகாலை அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த குழாய்கள் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்கள் தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் மாவனல்லை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அசுபினி எல்ல நீர் திட்டத்திற்கான நீர் குழாய்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அரநாயக்க உஸ்ஸாபிட்டிய பிரதேச சபை மைதானத்தில் அண்மையில் திடீரென தீ பரவியுள்ளது.

சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட இருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட 50 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்ததுடன் அவர்களில் ஐவர் இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் ஆறு பாடசாலை மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மைதானத்திற்கு அருகாமையில் உள்ள இரண்டு பாடசாலைகளில் தரம் 11 இல் இந்த மாணவர்கள் குழு கல்வி பயின்று வந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு பெரிதும் அடிமையானவர்கள் எனவும், விளையாட்டு மைதானத்தை புகைபிடிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் தீப்பெட்டிகள் மற்றும் சிகரெட்களை குழாய்களுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.

சம்பவத்தன்றும் அவர்கள் குழாய்களுக்கு அருகில் புகைபிடித்துள்ளனர். பின்னர் எஞ்சிய சிகரெட்டின் பகுதிகளை அலட்சியமாக குழாய்களிற்குள் வீசியுள்ளனர். தீப்பெட்டிகளையும் குழாய்களுக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் சிகரெட்டிலிருந்து பரவிய தீ பரவி, பாரிய சேதம் ஏற்பட்டதாக பொலிசார் நம்புகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யோஷிதவின் பாட்டியின் மனநிலை அறிக்கையை பெப்ரவரியில் சமர்ப்பிக்க உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல்...

அர்ஜூன, சகோதரர் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அப்போதைய இலங்கை பெற்றோலிய...

இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்