இலங்கை

20 தேங்காய் திருடியவருக்கு 1 வருட கடூழிய சிறைத்தண்டனை!

கெஹெலல்ல பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடிய இரண்டு குற்றச்சாட்டுக்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு முந்தைய குற்றங்கள் எதுவும் இல்லை என்பது கைரேகை அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

திவுலபிட்டிய கெஹல் எல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான சுமித் ரஞ்சித் ஜயலத் என்பவருக்கே ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில், கெஹெலல்ல, திவுலப்பிட்டியவில் வைத்து மேற்படி குற்றச்சாட்டுகளை குற்றம் சாட்டப்பட்டவர் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!