இலங்கை

தங்கக்கடத்தல் எம்.பியை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் பிரேரணை வருகிறது!

தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தனர்.

எம்.பி. ரஹீம் விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அனைத்து எம்.பி.க்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“எம்.பி. ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் முடிவு செய்ததோடு, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எம்.பி.யை வெளியேற்றலாம் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். எனவே எம்.பி. ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென தீர்மானித்தோம்” என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் தெரிவித்தனர்.

“எம்.பி. ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது” என்று ஆளும் கட்சி தரப்பினர் தெரிவித்தனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர டானியல், மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் வெளியேற்றப்பட்டதைப் போன்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வெளியேற்றியதற்கு முன்னுதாரணமும் உண்டு என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!