திருமணமான இளம் பெண்ணொருவரை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், பெண்ணுக்கு மதுபானம் வழங்கி போதையேற்படுத்தி, அவருடன் உறவு கொண்ட பின், தங்கநகைகளை அபகரித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் பெந்தோட்டை பகுதியில் நடந்துள்ளது.
திருமணமான 24 வயதான இளம் பெண்ணிடமிருந்தே தங்க நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் இளைஞன் ஒருவருடன் அறிமுகமான அந்த பெண், கணவருக்கு தெரியாமல் அந்த உறவை வளர்த்துள்ளார்.
அந்த பெண்ணை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், அதிகளவு மதுபானம் கொடுத்துள்ளார்.
இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு போதை தலைக்கேறிய நிலையில், அவரது தங்கநகைகளை அபகரித்துக் கொண்டு, இளைஞன் அந்த விடுதியிலிருந்து தப்பிச் சென்று விட்டார்.
பின்னர், போதை தெளிந்த பின்னரே தனக்கு நேர்ந்ததை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். தங்க நகைகள், பணப்பை, கைத்தொலைபேசி என்பன திருடப்பட்ட நிலையில், இது குறித்து பெந்தோட்டை பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.