கோடீஸ்வர வர்த்தகரான தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) காலை ஐவர் அடங்கிய சட்ட வைத்திய நிபுணர் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மாலை கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரேத அறையில் கொண்டு வரப்பட்டது.
பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த அவரது சடலம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று தோண்டியெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
கராப்பிட்டிய சட்ட வைத்திய பீடத்தின் பேராசிரியர் யு.சி.பி பெரேரா கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவன்புர, ஐந்து பேர் கொண்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனையை கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1