கிழக்கு

கசிப்பு கடத்தியவர் கைது!

மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கசிப்பு கடத்தி சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்று ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்து செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிவப்பு நிற ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் உட்பட கடத்தி செல்லப்பட்ட 20,000 மில்லி லீட்டர் கசிப்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் பிரதான வீதியில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள விசேட சோதனை சாவடியில் வைத்து கைதானார்.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியொகத்தர்கள் புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!