இலங்கை

அலி சப்ரி ரஹீம் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொக்சேகா இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படவில்லை என்பதைக் காட்டவே அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கச் செய்யப்பட்டார். எம்.பி.யை அரசியல் விளையாட்டாக தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வைத்தார். தங்கத்தை கடத்திய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இந்த சபையில் இருப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்ட பாதிரியார் ஜெரோமின் சம்பவமும் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது என்றார்.

இவ்வாறான நிகழ்வுகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என நாங்கள் கூற விரும்புகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் கிளர்ந்து போராட்டம் நடத்தியது உண்மையான- தேவையான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய பொன்சேகா, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல அமைதியான நிராயுதபாணியான புரட்சி தேவை என்றார்.

“சில எம்.பி.க்கள் அரகலயவைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இதனால்தான், சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும், விபச்சார விடுதிகளை நடத்துவதற்கும் அவர்கள் அரகலய உறுப்பினர்களை குற்றம் சாட்டுகிறார்கள், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!