மலையகம்

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பணிப்பெண் மரண விவகாரம்!

கொழும்பில் வீட்டுப் பணிப்பெண்ணொருவர் பொலிசாரின் தாக்குதலை தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினார்.

பதுளை, மடுல்சீயை சேர்ந்த பணிப்பெண் ஆர்.ராஜகுமாரியின் உடல் உரிய விசாரணைகள் இல்லாமல் புதைக்கப்பட்டாகவும், சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, முறையான உடற்கூற்றாய்வு பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

விமல் வீரவன்சவும் இதனை ஆதரித்தார்.

மனச்சாட்சியுள்ள யாரும் இந்த சம்பவத்தை ஆதரிக்க முடியாது என்றும், முறைப்பாட்டாளரான தொலைக்காட்சி தயாரிப்பாளர் முன்னிலையில் பொலிஸ் நிலையத்தில் பணிப்பெண் தாக்கப்பட்டதாகவும், தொலைக்காட்சி தயாரிப்பாளர் அந்த சம்பவத்தை தனது நண்பர்களுக்கு தெரிவித்து மகிழ்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இந்த விவகாரத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான பிரித்தானியர் உயர்ஸ்தானிகர் – திலகர் சந்திப்பு

Pagetamil

வயதில் கூடிய யுவதியை காதலித்த மாணவன் கடத்தல்!

Pagetamil

12 வயது சிறுவனை சீரழித்த தம்புள்ள மேயரின் சகோதரன் கைது!

Pagetamil

மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் காலமானார்!

Pagetamil

திறந்து வைத்தவர் யாருமாகட்டும்; திறக்க வைத்தது நாம் என்போம்: மலையக அரசியல் அரங்கம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!