29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

‘பொட்டு’வுடன் தொடர்பா?: இராணுவ புலனாய்வு தளபதியை கொன்ற குற்றச்சாட்டில் கைதானவர் சுட்டுக்கொலை!

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் துவான் முத்தலிஃப் கொலையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் ரயில்வே கடவு வாயிலுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் சனிக்கிழமை (20) அதிகாலை தொழில் தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.

களனி கல்பொரல்ல பகுதியைச் சேர்ந்த ஐ.டபிள்யூ.சஞ்சீவ (54) என்ற நபரே உயிரிழந்துள்ளார். அவரது பூர்வீக வீட்டிற்கு அருகில் அவர் சுடப்பட்டார்.

துப்புரவு சேவை ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு வர்த்தக இடங்களை சுத்தம் செய்வதற்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தினமும் காலை பொரளையில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வழமை போன்று, அவர் தனது மகளுடன் சனிக்கிழமை (20) அதிகாலை களனியிலிருந்து பொரளைக்கு வந்தார். அவரது மூத்த சகோதரி தற்போது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் T-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், தரையில் விழுந்த பின்னரும் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

20க்கும் மேற்பட்ட T-56 தோட்டாவின் வெற்றுக்கோதுக்கள் வீதியில் சிதறிக் கிடந்தன.

2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் போது விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு பத்திரிகையில் இந்த நபர் பணியாற்றியதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் இராணுவப் புலனாய்வு அதிகாரியாக இருந்த லெப்.கேணல் துவான் முத்தலிப் கொல்லப்பட்டார். இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக இவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த குற்றச்சாட்டில் இருந்து இந்த நபர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது தற்போதைய துப்புரவு சேவை வணிகம் தொடர்பான வணிக தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment