29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா

தாய்க்காக கிணறு தோண்டிய 14 வயது சிறுவன்

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கெல்வே கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாய தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகன் பிரணவ் சல்கர் (14) 9-ம் வகுப்பு படிக்கிறார். பிரணவ் சமீபத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை, மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து, தனது குடிசையில் விளக்கெரிய வைத்தான்.

இந்நிலையில், தனது தாய் நீண்ட தூரம் சென்று ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளான். கடப்பாரை, மண்வெட்டி, சிறு ஏணி ஒன்றை தயார் செய்து வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டும் பணியில் தனியாக களம் இறங்கினான். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டான். உணவு சாப்பிடுவதற்காக 15 நிமிடங்கள் மட்டும் ஓய்வெடுத்தான். அதன்பின் நாள் முழுவதும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டான்.

20 அடி ஆழம் தோண்டியதும் கிணற்றில் தண்ணீர் வந்தது. இதைப் பார்த்த பிரணவ் மகிழ்ச்சியடைந்தான். இந்த கிணறு தற்போது பிரணவ் குடும்பத்தின் பெருமையான சொத்தாக மாறியுள்ளது. இந்த கிணற்றை பார்க்க கெல்வே கிராமத்துக்கு பலர் வந்து செல்கின்றனர். பிரணவின் பள்ளி ஆசிரியரும், நேரில் வந்து கிணற்றை பார்வையிட்டு சென்றார். பிரணவின் சாதனையை பாராட்டிய கெல்வே கிராமத் தலைவர், பிரணவ் வீட்டுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

Leave a Comment