இலங்கை

‘5 வருடங்களிற்கு கட்சிக்குள் எந்த பொறுப்பையும் ஏற்கமாட்டேன் என சிறிதரன் சொன்னார்’: எம்.ஏ.சுமந்திரன் தகவல்

அடுத்த 5 வருடங்களிற்கு கட்சியின் எந்தவொரு பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என சி.சிறிதரன் தெரிவிததார் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்தப்பில் இதனை தெரிவித்தார்.

“2020 பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் சி.சிறிதரன் ஒரு ஊடக சந்திப்பில், அனைவரும் சேர்ந்து என்னிடம் கேட்டால் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறினார்.

இதற்கு மறுநாள், நான் ஊடக சந்திப்பை நடத்திய போது, பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் இது பற்றி கேட்டார். சிறிதரன் கேட்பதை போல, அனைவரும் சேர்ந்து சிறிதரனை தலைவராகும்படி கேட்டால் எனது ஆதரவும் இருக்குமென்றேன். இப்பொழுதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.

ஆனால், அதை தொடர்ந்து நடந்த முதலாவது மத்தியகுழு கூட்டத்தில், தான் அப்படியாக சொன்னது தவறென்றும், அதனால் தலைவருக்கு ஏதாவது மனச்சங்கடம் ஏற்பட்டால் மன்னிப்பு கோருவதாகவும் சிறிதரன் தெரிவித்திருந்தார். அத்துடன் 5 வருடங்களிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என்றார்“ என சுமந்திரன் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார், முன்னணி மீது அடாவடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்: சித்தார்த்தன் எம்.பி

Pagetamil

கஜேந்திரகுமார் மீது கொலை முயற்சி மேற்கொண்டவர்கள் மீது உடன் நடவடிக்கை வேண்டும்: சிறிதரன் எம்.பி

Pagetamil

சுமார் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்!

Pagetamil

ஜனவரி 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்புகள்

Pagetamil

சுகாதாரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் தீ விபத்து

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!