முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி ஆலயத்தை மீள அமைக்க ரணில் பணிப்பு: மாவையை நேரில் சந்தித்து பேசவும் விருப்பம்!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆலயம் இடித்தழிக்கப்பட்ட அட்டூழியம் தொடர்பில் நேற்று மாலை, மாவை சேனாதிராசாவினால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் சைவர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும், ஆலயத்தை மீள அமைத்துக் கொடுக்க வேண்டுமென்றும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக மாவை சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜனாதிபதியின் பதிலை தெரிவித்தார்.

ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் உடனடியாக விசாரணை ஆரம்பிக்க பணித்துள்ளதாகவும், அந்த இடத்தில் மீளவும் விக்கிரமங்களை நிலைநாட்டி, முன்னர் இருந்ததை போலவே அமைக்குமாறும் பணித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த வாரம் மாவை சேனாதிராசாவுடன், ஜனாதிபதி நேரடியாக சந்தித்து பேச விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான திகதி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?: இன்று மருதங்கேணியில் நடந்தது என்ன?

Pagetamil

நாட்டை விற்கப்போகிறார்கள் என்ற தவறான பிரச்சாரமாம்: ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றிய உரை; ஊழல் குறித்தும் மெத்தனம்!

Pagetamil

நான் ‘இடும் சாதி’; கொழும்பில் வளர்ந்தால் சாதி பற்றி அறிந்திருக்கவில்லை: விக்னேஸ்வரன் பகிரங்க விளக்கம்!

Pagetamil

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

Pagetamil

இலங்கையில் பிரமிட் மோசடியில் ஈடுபடும் 8 நிறுவனங்கள்: இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!