கிழக்கு

மட்டு-கல்முனை வீதியில் விபத்து: தொழில் நுட்ப கல்லூரி மாணவன் ஸ்தலத்தில் பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் திங்கட்கிழமை (27) 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் சுங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பலியானவர் முகம்மட் அன்பாஸ் (17) என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை பக்கமாக வந்துகொண்டிருந்த வான், துவிச்சக்கரவண்டியில் வந்து கொண்டிருந்தவர் மீது மோதி விட்டு தப்பியோடியுள்ளது. வானின் இலக்கத்தகடு கழன்று கீழே விழுந்துள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞரே கொல்லப்பட்டுள்ளார்.

இளைஞரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

-வ.சக்திவேல்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டு வங்கி பெட்டகத்திலிருந்த நகைகளை திருடிய 3 உத்தியோகத்தர்களுக்கும் விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சிக்கிய பலாப்பழ ஹெரோயின்

Pagetamil

அம்பாறையில் வளர்ப்பு புறா மூலம் போதைப்பொருள் கடத்தல் முயற்சி

Pagetamil

மட்டக்களப்பில் இலங்கை வங்கியில் பாரிய கொள்ளை முயற்சி: ATM உடைப்பு

Pagetamil

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை புறக்கணித்த கிழக்கு ஆளுனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!