29.3 C
Jaffna
March 29, 2024
குற்றம்

கட்டாயமாக கட்டிப்பிடித்ததை வெளியில் சொல்லாமலிருக்க ரூ.1000 கொடுத்தவர் கைது!

பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக கட்டியணைத்த நபர், அந்த விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருக்க ரூ.1000 கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம், ரத்கம, புஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் (26) நடந்துள்ளது. அந்த நபரை கைது செய்யப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணின் வீட்டிற்குச் சென்று ஒரு குவளை தண்ணீர் கேட்டார். குறித்த பெண் தண்ணீர் குவளையை எடுத்து வர வீட்டிற்குள் சென்ற போது பின்னால் சென்று அவரை கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கட்டியணைத்தவரை அறைந்துள்ளார்.

அந்த பெண் தனது அத்துமீறலை அனுமதிக்கவில்லை, வில்லங்கமாகப் போகிறது என்பதை உணர்ந்ததும், அவரது வீட்டில் 1000 ரூபாயை வைத்துவிட்டு இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

குறித்த பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment