26.4 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

மட்டக்களப்பு குருக்களிடம் பொலிஸ் வேடத்தில் கொள்ளை!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாரி அம்மன் கோவிலின் குருக்களிடம், பொலிசார் என கூறி கொள்ளையிட்ட நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

69 வயதான குருக்கள் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றபோது, அவரது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வந்த இருவர், தாங்கள் பொலிசார் என்று கூறி அவரை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

அவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, பையில் இருந்த ரூ.110,000 ரொக்கம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குருக்கள் பழுகாமத்தில் வசிப்பவர். குருக்கள் மூலம் கிடைத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment