தேர்தலுக்கு பணம் வழங்குகிறீர்களா? இல்லையா? என ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை கிடுக்குப்பிடி பிடித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
இன்று நாடாளுமன்ற விவாத்தின் போது இந்த சம்பவம் நடந்தது..
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன-
இதுபற்றி உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடந்து வருகின்றன. திறைசேரிச் செயலர் உயர் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்துள்ளார். அந்த முடிவுகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். நீதிமன்றத்தில் உள்ள விஷயங்களைப் பேசுவதில்லை. நீதிமன்றம் சென்றது நாங்கள் அல்ல என்றார்.