29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

யாழில் பிரதேச செயலாளர் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் நெல் விற்கலாம்!

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையில் நெல்விற்பனை செய்ய விரும்புவோர் தமது பிரதேச செயலர் ஊடாக விற்பனை செய்ய முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆனால் சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியினை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கமைய யாழ் மாவட்டத்தில் பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்திற்கமைவாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 30 மெற்றிக்தொன் சிவப்பு மற்றும் வெள்ளை நாடு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. எனவே நெல்லை விற்பனை செய்யவிரும்பும் விவசாயிகள் தமது கமக்கார அமைப்பின் ஊடாக தத்தமது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு நெல்லை விற்பனை செய்ய முடியும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!