29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

மக்கள் வங்கி தொடர்பான செய்தி போலியானது!

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்துள்ள அரச நிறுவனங்கள், வங்கிக் கணக்குகளை நீக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக வெளியான செய்தி போலியானது என தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை ஐ.தே.க பிரமுகர்கள் உரிமையாளர்களாக உள்ள ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அண்மையில் நடந்த வேலைநிறுத்தத்தில் மக்கள் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டதையடுத்து இந்த செய்தி பரப்பப்பட்டது.

எனினும், இது போலியானது என இலங்கை மக்கள் வங்கி தெரிவுபடுத்தியுள்ளது.

தொடர்பான அறிக்கைகளை மக்கள் வங்கி நிராகரித்துள்ளது.

வங்கியுடனான அவர்களின் கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் பெறப்படவில்லை என்று வங்கி தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!