யாழ்ப்பாணத்திலுள்ள முன்பள்ளி விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடமராட்சி, கரணவாய் பகுதியிலுள்ள முன்பள்ளியொன்றின் விளையாட்டுப் போட்டி அழைப்பிதழில், விருந்தினர் ஒருவரின் தகைமையை குறிப்பிட்ட விதமே சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.
விளையாட்டு போட்டியில் விருந்தினராக கலந்து கொள்ளும் ஒருவர்- அங்கஜன் இராமநாதன் வட்டார உறுப்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர், அந்த பகுதியின் ஏஆர்ஓ வாக இருக்கிறார். (அதாவது அங்கஜன் இராமநாதன் இணைப்பாளர்!) இதனால் அவரை விருந்தினராக அழைத்துள்ளார்களா என சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.
இதேவேளை, குறிப்பிட்ட அங்கஜன் இராமநாதன் வட்டார உறுப்பினர், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
தேர்தல் சட்டங்களின் படி, வேட்பாளர் ஒருவர் இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது. இந்த விதியை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.