இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளார்.
சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் குறித்த துப்பாக்கியை பையில் வைத்து பலாங்கொடையில் உள்ள அகில சாலிய எல்லாவலவின் இல்லத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான அறையில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அவர் பணிக்கு திரும்பிய போது துப்பாக்கி காணாமல் போயுள்ளதால் இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1