29.5 C
Jaffna
March 27, 2023
மலையகம்

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் பரிசு வென்றவர், மனைவியின் தங்கையுடன் தலைமறைவு!

அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்த ஒருவர், தனது மனைவியின் தங்கையுடன், மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி, கலஹா நகரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த நகரத்தில் சலூன் வைத்திருக்கும் சுமார் 45 வயதான முடி திருத்துனர் ஒருவர் ஒவ்வொரு நாளும் பல வகையான அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளை கொள்வ​னவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

அவ்வாறு கொள்வனவு செய்த ஐந்து அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளில் சுமார் 5 இலட்சம் ரூபாய் அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது.

வெளிநபர்களின் காதுகளுக்கு இந்த செய்தி கிட்டவில்லை. எனினும், அவருடைய உறவினர்கள் வீட்டுக்குத் தேடிவந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு வாழ்த்துச் சொல்ல வந்த மனைவியின் தங்கையும், தங்கையின் இரண்டு பிள்ளைகளும் இரண்டொரு நாட்கள் அங்கேயே தங்கிவிட்டனர். மனைவியின் ஆலோசனையின் பிரகாரமே அவர்கள் அவ்வீட்டில் தங்கியுள்ளனர்.

அன்றையதினம் அதிகாலையில் எழுந்த அவ்விரு பிள்ளைகளும் தாயை தேடி அழுதுள்ளனர்.

முடித்திருத்துனரின் மனைவி, தன்னுடைய தங்கையை வீடு முழுவதும் தேடியுள்ளார் எனினும் தங்கையை காணவில்லை.

அதுதொடர்பில் தன்னுடைய கணவனிடம் தெரியப்படுத்துவதற்காக கணவனை வீட்டிலுள்ள பல அறைகளிலும் தேடியுள்ளார். கணவனையும் காணவில்லை. அதன்பின்னரே முடித்திருத்துனரின் மனைவி விளங்கிக்கொண்டுள்ளார்.

தனது கணவரும், தனது தங்கையும் ஒன்றாக ஓடிச் சென்று விட்டனர் என்பதை புரிந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோயில்களில் தங்கநகைகள் திருடிய இந்திய தம்பதி உள்ளிட்ட 7 பேர் கைது!

Pagetamil

விபத்தில் தந்தையும், மகனும் பலி

Pagetamil

ரூ.1.2 மில்லியன் கடனுக்காக வர்த்தகரின் மகனைக் கடத்தியவரை தேடும் பொலிசார்!

Pagetamil

தொதலுக்குள் எலி

Pagetamil

குன்றுடன் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!