31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் மலேசிய பிரஜை கைது!

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 350 கிராம் கொக்கெய்னுடன் மலேசிய பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று (13) கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக பிரேசிலில் இருந்து வந்த மலேசிய பிரஜையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அவரது சூட்கேஸில் கோகோயின் போதைப்பொருள் சூட்சுமமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. நான்கு பொட்டலங்களில் கொக்கெய்ன் அடைக்கப்பட்டு சூப் பாக்கெட்டுகள் போன்று பொதி செய்யப்பட்டிருந்ததாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 54 வயதுடைய சந்தேகநபர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை எனவும் சந்தேக நபரும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment