29.5 C
Jaffna
March 27, 2023
இலங்கை

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் செயலிழக்கலாம்?

நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி வழங்கப்படாவிட்டால், நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க டொலர்களை பாதுகாப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் 15.3 பில்லியன் ரூபாவை விடுவிக்கப்பட வேண்டும் என சுமனசேகர தெரிவித்தார்.

பணம் செலுத்தும் உடன்படிக்கையுடன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாகவும்,  நிலக்கரியை கப்பலில் ஏற்றும் போது 30% கட்டணம் செலுத்தப்படுவதாகவும், 70% கட்டணத்தை இறக்கும் போது செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 30ஆம் திகதிக்கும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று ஏற்றுமதிகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கப்பலுக்கு 30% கொடுப்பனவான ரூ.1.35 பில்லியன் செலுத்தப்பட்டது, மேலும் இரண்டு கொடுப்பனவுகள் செய்யப்பட உள்ளன என்று சுமனசேகர கூறினார்.

வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு கொடுப்பனவுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கை மின்சார சபையின் நிதித் தேவையை பூர்த்தி செய்யத் தவறியதால் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று அவர் கூறினார்.

எதிர்வரும் வாரத்தில் சிக்கலான சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவித்த தலைவர், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நிதித் தேவை 10.74 பில்லியன் ரூபாவாகும் எனவும் தெரிவித்தார்.

மின் உற்பத்தி நிலையம் இயங்குவதற்கு போதிய கையிருப்பு இல்லாததால் உடனடி தீர்வுகள் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்று நிலக்கரி ஏற்றுமதிகளுக்காக 4.56 பில்லியன் ரூபாவை வழங்குமாறு இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முட்டைகளில் தயாரிக்கப்படும் கேக்கை வாங்காதீர்கள்!

Pagetamil

இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

Pagetamil

மூளைச்சாவடைந்த மாணவியின் உடல் உறுப்புக்கள் பொருத்தப்பட்ட 7 பேர் உயிர்பிழைத்தனர்!

Pagetamil

தென்னகோனுக்கு எதிரான மனு செலவுகளுடன் நிராகரிப்பு!

Pagetamil

வாகன விபத்தில் சாரதி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!