27.4 C
Jaffna
March 20, 2023
இலங்கை

தமிழர்களின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் போராட்டம் தமிழ் அரசுக் கட்சி பொதுக்குழுவுடன் வெடிக்கிறதாம்: உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி பரப்புரை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு இன்னும் ஓரிரண்டு மாதங்களில் நடைபெறவுள்ளது. விரைவில் எமது மாநாட்டை கூட்டி, எதிர்காலத்தில் எமது இலட்சியத்தை அடைவதற்காக, தமிழர் தேசத்தில் தமிழர்கள் ஆளுவதற்காக, அந்த விடுதலையை- சுதந்திரத்தை பிரகடனம் செய்வதற்காக- அதற்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக அந்த மாநாட்டிலே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் நாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (4) மட்டக்களப்பில் நடந்த உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் ஆச்சரியமான முறையில் நாட்டை ஆள்கிறது. தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்க, ஆச்சரியமான முறையில் பாராளுமன்றத்திற்கு வந்து, ஆச்சரியமான முறையில் ஜனாதிபதியாகி, ஆச்சரியமான முறையில் ஆட்சி செய்கிறார் என்றும் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 வாழைக்குலைகளை வெட்டியவர்களிற்கு 1 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

இரு நிறுவனங்களை விற்க அனுமதி

Pagetamil

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

Pagetamil

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!