28.5 C
Jaffna
March 20, 2023
உலகம் முக்கியச் செய்திகள்

கொல்ல மாட்டேன் என உத்தரவாதமளித்த புடின்; அதன் பின் பதுங்குகுழியிலிருந்து வெளியேறி செல்பி படம் வெளியிட்ட ஜெலென்ஸ்கி: வெளியான சுவாரஸ்ய தகவல்!

ரஷ்யா-உக்ரைன் போரின் ஆரம்ப நாட்களில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொல்ல மாட்டேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறினார்.

சனிக்கிழமையன்று YouTube சனலில் வெளியிடப்பட்ட வீடியோவில் முன்னாள் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்னட், இந்த தகவலை வெளியிட்டார்.

உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு மார்ச் மாதக் கூட்டத்தில் புடின் தனக்கு “இரண்டு பெரிய சலுகைகளை” வழங்கினார் என்று கூறினார்.

மோதலின் ஆரம்ப நாட்களில் மத்தியஸ்தம் செய்வதற்காக மார்ச் 5, 2022 அன்று மொஸ்கோவில் பென்னட், புடினை சந்தித்தார். யுத்தம் இப்போது 12வது மாதத்தை எட்டியுள்ளது.

“ஜெலென்ஸ்கி ஒரு பதுங்கு குழியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை நான் அறிவேன்… நான் சொன்னேன், ‘நீங்கள் ஜெலென்ஸ்கியைக் கொல்ல விரும்புகிறீர்களா?’ என புட்டினிடம் கேட்டேன்.

அவர் கூறினார், ‘நான் ஜெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன்,” என்று பென்னட் பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

அவர் புட்டினிடம் கேட்டார்: “நான் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஜெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டீர்கள் என்று உங்கள் உத்தரவாதத்தை எனக்குக் கொடுக்கிறீர்களா?“ என.

அதற்கு ரஷ்ய ஜனாதிபதி பதிலளித்தார்: “நான் ஜெலென்ஸ்கியைக் கொல்ல மாட்டேன்.”

புட்டினுடனான மூன்று மணிநேர சந்திப்புக்குப் பிறகு, பென்னட் ஜெலென்ஸ்கியை அழைத்து, “நான் ஒரு சந்திப்பிலிருந்து வெளியே வந்தேன் – புடின் உங்களைக் கொல்லப் போவதில்லை.

“ஜெலென்ஸ்கிஎன்னிடம் கேட்டார், ‘நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?’ என. நான் 100 சதவீதம் சொன்னேன். புடின் உங்களைக் கொல்லப் போவதில்லை.

அவர்களின் உரையாடலுக்கு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஜெலென்ஸ்கி தனது அலுவலகத்தில் ஒரு செல்ஃபி எடுத்து “எனக்கு பயமில்லை” என்ற தலைப்புடன் அதை வெளியிட்டார் என பென்னட் தெரிவித்தார்.

ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் படையெடுப்பை ஆரம்பித்தது.  ரஷ்யாவின் படையெடுப்பு இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடியைத் தூண்டியுள்ளது.

ஜனவரி 31 வரை, 8 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சீனாவை பார்த்து கொஞ்சம் பொறாமைதான்’: புடின்!

Pagetamil

பொருளாதார நெருக்கடியின் எதிரொலி: கோழிப் பாதங்களை சாப்பிடுமாறு மக்களை கேட்ட எகிப்பு அரசு!

Pagetamil

இரண்டாவது டெஸ்டிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

Pagetamil

சீன ஜனாதிபதி இன்று ரஷ்யா செல்கிறார்!

Pagetamil

முல்லைத்தீவு முஸ்லிம் கூட்டணி தவறுதான்… கட்சியின் தலைவர் நானா- மாவைக்கு வந்த குழப்பம்: இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!