யாழ்ப்பாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை பகுதியில் நேற்று (1) இரவு அவர் கைதானார்.
அரியாலை, பூம்புகாரை வசிப்பிடமாக கொண்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, நேற்றிரவு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றுகிறார்.
கைதானவரிடமிருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1